Friday, November 4, 2011

பேர்ன் மாநகரில் பாரஊர்தி ஏறி இலங்கைச் சிறுவன் ஸ்தலத்திலேயே பலி.

சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ன் மாநகரிலுள்ள Ittigen எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் காலை பாடசாலை சென்றுகொண்டிருந்த இலங்கைச் சிறுவன் மீது பாரஊர்தி ஒன்றுமோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். 5 நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஆகரன் எனும் சிறுவன் பாதசாரிகளுக்கான கடவையில் சென்று கொண்டிருந்தபோது பின்நோக்கி செலுத்தப்பட்ட பாரஊர்தி அவரை மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஆகரனின் தந்தை திலிபன் கூறுகையில் தனது மகனை வாகன ஓட்டுநர்கள் தெளிவாக கண்டு கொள்ளவேண்டுமென்பதற்காக ஒரேஞ் நிறத்திலான JACKET ஒன்றும் சிவப்பு நிறத்திலான சப்பாத்தும் வாங்கிகொடுத்தும் இவ்வாறு நடந்து விட்டது என கவலை தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையில் ஆகரனின் உருவப்படத்திற்கு மெழுகு வர்த்திகள் வைக்கப்பட்டுள்ளதை கீழுள்ள படத்தில் காண்கின்றீர்கள்.



மேலும் விபத்து தொடர்பில் அந்நாட்டு பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com