Sunday, November 27, 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையையின் காலி பின்னதுவையில் உள்ள ஆரம்ப வாயிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அக்காஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொட்டாவையில் இருந்து காலி வரையிலான 96 கிலேர் மீட்டர் தூரத்தைக் கொண்டுள்ள இந்த தெற்கு அதிவேக பெருந்தெருவை நிர்மாணிப்பதற்காக 560 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com