Thursday, November 3, 2011

மாவட்ட செயலாளர்கள் அரச அதிபர்களாக பதவிப் பெயர் மாற்றப்படுவர்

சகல மாவட்ட செயலாளர்களும் மீண்டும் அரச அதிபர்களாக பதவிப்பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளனர் .இது குறித்து பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல .பிரதேச செயலாளர்களை மேற்பார்வை செய்வதற்கு இவ்வதிகாரங்கள் போதாது.

சில வேளைகளில் பிரதேச செயலாளர்களினால் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்படுகிறது .இவ்வாறான சிக்கல் நிலைகளை தவிர்ப்பதற்காகவே மாவட்ட செயலாளர்கள் அனைவரும் முன்னர் பயன்படுத்தப்பட்ட பதவிப்பெயரான அரச அதிபர் பதவிப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது பிரதேச செயலாளர்களும் இப்புதிய யோசனையின் பிரகாரம் உதவி அரசாங்க அதிபர்களாக பதவிப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com