Thursday, November 3, 2011

டீசல் விலை அதிகரித்தாலும் , பஸ்கட்டணம் அதிகரிக்காதாம்

விலைசூத்திரத்திற்கேற்ப கட்டணங்களை அதிகரிக்க முடியாது. டீசல் விலை அதிகரித்த போதிலும் பஸ்கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.

8 ரூபா அதிகரிப்பை நாம் உணர்கின்றோம். கொள்கை அளவில் எடுத்துக்கொண்டால், பஸ் கட்டண அதிகரிப்பு, பஸ் கட்டண சூத்திரமொன்று காணப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு இது சீர்த்திருத்தப்பட்டுள்ளது. அந்த சீர்த்திருத்தத்தில், 4 சதவீதம் அதிகரித்தால்மட்டுமே, பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 3.2சதவீதம் மாத்திரமே, அதிகரித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, பஸ்கட்டணங்களை அதிகரிக்க முடியாது. ஏனெனில், 3.2 சதவீத அதிகரிப்பே, எரிபொருளில் ஏற்பட்டுள்ளது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com