Wednesday, November 30, 2011

இலங்கையை ஈரான் கைவிடுகின்றதா? கடன்தொகை ரத்தாகும் சாத்தியம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த ஈரான் வழங்க இருந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாற்று நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கான ஆய்வறிக்கை ஈரானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கொந்தழிப்பு நிலை காரணமாக இது குறித்து சாதகமான பதில் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எரி;பொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான அளவு காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக செலவாகும் அடிப்படைச் செலவான 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com