Wednesday, November 16, 2011

யாழிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தண்டவாளக் கம்பிகள் சோதனைச் சாவடியில் மாட்டியது.

யாழ்ப்பாணத்திலிருந்து மாதம்பே பிரதேசத்திற்கு கொண்டு வந்த பெரும் தொiகாய பழைய இரும்புகளுடன் வெட்டப்பட்ட பெருந்தொகையான புகையிரத் தண்டவாளக் கம்பித் துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக சாலியவௌ பொலிஸார் தெரிவிக்கிறனர்.

புகையிரதத் தண்டவாளக் கம்பிகளுடன் அதனை ஏற்றி வந்த லொரி மற்றும் அதன் சாரதி, உதவியாளர் ஆகியோர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் பல்கஸ்ஸேகம பாதையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பரிசோதiனை செய்த போது இந்த தண்டவாளங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருட்கள் ஏற்றிச் செல்வதற்கு சட்டம் அனுமதித்துள்ளதா என ஆராயந்தும் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com