Friday, October 28, 2011

ரயில் தடம் புரண்டதால் மருதானை - கோட்டை ரயில்சேவை பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் இன்று மாலை 4.30 மணி அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் மருதானை புகையிரத நிலையத்திற்குமிடையில் தடம்புரண்டதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர் நிஹால் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெளி இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில்கள் மருதானையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தடம்புரண்ட ரயிலை சீர்செய்யும் பணியில் ஊழியகள் ஈடுபட்டுள்ளதாகவும் சீர்செய்யும் நடவடிக்கை நிறைவுபெற்றதும் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்புமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com