Sunday, October 16, 2011

துமிந்த சில்வா கொலைச் சந்தேக நபர் அல்லவாம்.

கொலன்னாவ பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபராக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா காணப்படவில்லை என இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல தெரிவித்துள்ளார். பி.பி.ஸி.சிங்கள ஒலிபரப்பான சந்தேஷியவுக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லேரியா துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் பாரதவின் மீது துமிந்தவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என பாரதவின் சாரதி குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்திதுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com