Sunday, October 16, 2011

த.தே.கூ வின் புதிய பிரமுகர்களுக்கு விசேட கருத்தரங்குகள்.

அண்மையில் இடம்பெற்ற மாநகர , நகர , உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் வெற்றிபெற்று மேயர்கள், பிரதி மேயர்களாக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு வவுனியாவில் விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மேயர்கள் பிரதி மேயர்களுக்கு மாநகர சபை, நகர சபை, பட்டினசபை, உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பானதும் , அத்தோடு சம்பந்தப்பட்ட விடயக்கோவைகள் தொடர்பானதுமான விளங்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி பிரமுகர்கள் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிற நகர்களுக்கு செல்லவேண்டிவரும் எனவும் அதற்கு முன்னர் கரண்டியால் சாப்பிட பழகி கொள்ளவேண்டும் எனவும் பயிற்சியில் கலந்து கொண்டோரிடம் வேண்டப்பட்டதாக தெரியவருகின்றது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com