Saturday, October 15, 2011

விடுதலைப் புலிகளின் சகல இரகசியங்களும் தெரிந்தவன் நான் ஒருவனே – கருணா

வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல இரகசியங்ளையும தெரிந்தவன் நான் ஒருவன் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேசம், யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை நான் அம்பலப்படுத்தப்படுத்தவேன்.

இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை. இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் தற்போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்காமை காரணமாக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்றை ஏற்படுத்த வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர்.இது தொடர்பாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com