Saturday, October 15, 2011

23 உள்ளூராட்சி சபைக்கான பிரதானிகளின் பெயர்கள் வர்த்தமானியில்

23 உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தலைவர்கள், பிரதித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மற்றும் கால எல்லையை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரி்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அத்திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் முடிவடையவிருந்த கால அவகாசம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பீ.சுமனசிறி குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் உடைமைகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத் தின் கீழ் கட்டாயமாகும் எனவும். இதற்கமைய சொத்துகள் மற்றும் உடைமைகள் குறித்த விடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டுமெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com