Tuesday, October 18, 2011

அழகு சாதன நிலையங்களை பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்

நாட்டில் உள்ள அனைத்து அழகுசாதன நிலையங்களையும் பரிசோதனை செய்ய தேசிய அழகுசாதன உபகரணங்கள் மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அழகுசாதன திரவியங்கள் மற்றும் அழகுசாதன நிலையங்கள் குறித்து கடந்த சில நாட்களாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அவற்றை பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அழகுசாதன நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகுசாதன திரவங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளவையா என அடுத்த மாதம் முதல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

பதிவு செய்யப்படாத அழகுசாதன திரவியங்களை பயன்படுத்தும் நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஒளடதங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com