Monday, October 17, 2011

கொரிய மொழிப் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோர் 28ம் திகதி

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒக்டோபர் 28ம் திகதி வெளியிடப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

பரீட்சை இடம் பெற்றபோது முறைக்கேடான வகையில் பரீட்சை எழுதிய குற்றத்திற்காக 21 பரீட்சாத்திகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

சுமார் 50 ஆயிரம் பரீட்சாத்திகள் பங்குபற்றிய கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை கொழும்பு மாவட்டத்தில் 10 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com