Wednesday, September 28, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமான தொடர் கருத்தரங்குகள்

சிறுவர் துஷ்பிரயோகம் நாடளாவிய ரீதியில் சாதாரண அம்சமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தற்போது நாட்டு மக்களின் மனதில் ஏற்பட ஆரம்பித்துள்ளது. காரணம் அண்மைக்கா லமாக இடம்பெற்றுவரும் தொடர் சிறுவர் துஷ்பிரயோகம் சார் சம்பவங்களே.

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் கிண்ணியாவின் பல பாடசாலைகளிலும் இடம்பெற்றுவருகின்றன. மேற்படி கருத்தரங்கில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொண்டதோடு, 5-10 வயதுக்குற்பட்ட பிள்ளைகள் எவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்படுகிறார்கள், அதை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பது சம்பந்தமான விளக்கங்கள் இங்கே வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சும் கனேடியன் றெட்குரோஸும் இதற்கான அணுசரனையினை வழங்கி வருகின்றன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com