Saturday, September 3, 2011

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய முதியவர் கைது.

கடையொன்றிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 75 வயது நிரம்பிய வயோதிபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வெலிமடை பகுதியின் டயரபா பெருந்தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பெனடோல் வில்லைகள் மற்றும் பிஸ்கட் வகைகளை கடையில் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை வயோதிபர் ஒருவர் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி கடைக்கு சென்று வீடு திரும்ப தாமதமாகியதையடுத்து, சிறுமியின் தாய் தனது மகளைத் தேடி வரும்போது மகள் எதிர்பட்டு தனக்கேற்பட்ட அனர்த்தத்தை தாயிடம் கூறினாhள். இது சம்பந்தமாக தாய் தனது மகளை கூட்டிக்கொண்டு வெலிமடை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தபின், சிறுமி , வெலிமடை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்புகாரின் பேரில் 75 நிரம்பிய வயோதிபரொருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com