Sunday, August 21, 2011

சிறுமி மீது பாலியல் வல்லுறவுகொண்ட குற்றச்சாட்டில் தேரர் கைது.

சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிஹிந்தளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளரான சங்கைக்குரிய நமலவௌ ரட்னசார தேரரை எதிர்வரும் 24ம் திகதிவரை பொலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தேரர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ரிக்கிரி கே.ஜயதிலக முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு இரகசிய பொலிஸார் நீதவானிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்பவம் அநுராதபுர வலயத்தில் இடம்பெற்றுள்ளதால் தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு தன்னால் உத்தரவிட முடியாதென கூறிய நீதவான் அதுவரையில் அவரை பொலிஸ் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

எதிர்வரும் 24ம் திகதி சந்தேகநபரான தேரரை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com