Sunday, August 21, 2011

வீதி விபத்துக்களில் தினமும் எட்டு பேர் பலி

கடந்த வருடம் 37 அயிரத்து 496 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் பதிவுகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்துக்களில் 2483 விபத்துக்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ள விபத்துக்கள் எனவும் இந்த விபத்துக்கள் காரணமாக 2630 பேர் மரணித்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கள காரணமாக அவையவங்களை இழந்தவர்கள் மற்றும் பூரண இயலாமைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், ஏறக்குறைய தினமொன்றுக்கு எட்டு பேர் வரை விபத்துக்கள் காரணமாக மரணிப்பாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்களின் பின்னர் இரு தரப்பனருக்குமிடையில் வீதியில் வைத்து சமரசம் செய்து கொள்ளப்பட்ட சம்பவங்களையும் உள்ளடக்கினால் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிட்டுள்ளதைவிட அதிகமாக இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com