Wednesday, August 10, 2011

இந்தச்செய்திய கொஞ்சம் கேளுங்கோ..

மட்டகளப்பிலிருந்து கிளம்பி கொழும்புக்கு வந்திருந்தன், எல்லாம் அந்த ரேடியோவில நடக்கிற நிகழ்ச்சியில பங்குபத்தத்தான்.. உள்ளே சென்று கலையகத்துக்குள்ள கதைசியிட்டு இருந்தன் அப்ப ஒப்பிஸிக்கு ஒரு டெலிபோன் வந்திச்சி...

என்ன அத எடுத்த அந்தப் பொன்புள்ள.. “இல்ல ஐயா... அதெல்லாம் நீங்க யாப்பானம் போனவுடன் போடுறம்....” என்று செல்லிக்கிட்டிருந்திச்சி”

நானும் மூக்க நுளைச்சன் என்ன மேட்டர் என்டா...

யாப்பானத்து எம்.பி ஒருவர் அவர் யாப்பானம் போறத போன் போட்டுச் சொல்லி அத செய்தியில போடச்சொல்லிருக்காரு! அதுக்குத்தான் அந்தப்புள்ள அதெல்லாம் நீங்க போங்க பிறகு நாங்க போடுறன் என்டிருக்கு...

இப்ப பாத்திங்கயன்டா மக்களே! யாப்பாணத்து எம்.பி யாப்பாணத்தில இருந்து உத்தியபூர்வ விசயமா கொழும்பு வாரத விட்டுப்போட்டு... அவக யாப்பாணம் போறத செய்தியா சொல்லனும் என்டு ஆசைப்படுகிறார்.

முன்னாரு காலத்தில எல்லாம் புலியிருந்திச்சி.. அப்ப அடிக்கடி யாப்பாணம் போறது பிரச்சின.. இப்பதான் 24 மணிநேரமும் பஸ் ப்ரியா ஓடுதே.. இப்ப யாழ்பாணத்துக்காரர் யாழ்பாணம்போறத செய்தியாக்கிறார் என்று புரியுதோ உங்களுக்கு!..?

எனக்கென்டா எல்லாம் சூனியம்தான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com