Wednesday, August 17, 2011

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார்

சிங்க படையணியின் சிரேஷ்ட உறுப்பினரான மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலமும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கடமையாற்றி வந்தார். இவர் உயர்கல்வியைத் தொடர்வதற்கா வெளிநாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளதையடுத்தே மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை புனர்வாழ்வு ஆணையகம் மேற்கொண்டு வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com