Wednesday, August 17, 2011

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் பிணை.

உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மரணமான தொழிற்சாலை ஊழியர் ரொசேன் சானக்கவின் (22 வயது) மரணம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இன்று புதன் கிழமை நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் கடும் நிபந்தனைகள் விதித்து பிணை வழங்கியது.

சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ரத்நாயக்க, அதே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சுற்றறாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி. கே. ஏஸ். ரணசிங்க ஆகியோருக்கே மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கினார்.

இரு பொலிஸ் அதிகாரிகளும் தலா 50 ஆயிரம் ருபா ரொக்கப் பிணையிலும் தலா 20 இலட்சம் ருபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com