Monday, August 22, 2011

புலிகளின் பிரச்சாரங்களுக்கு எதிரான வேலைத் திட்டம் ஒன்று வேண்டுமென்கிறார் ஜனாதிபதி

இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் அடிப்படையற்ற பிரசாரங்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக பயனுள்ள பிரசார வேலைத்திட்டம் ஒன்றை முனனெடுக்க வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும். இது தொடர்பில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்கு பொறுப்புள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையர் குழுவினர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் தாய்நாட்டின் புகழை உயர்த்துவதற்கும் இலங்கை தொடர்பான தொடர்பான தகவல்களை முறையான வகையில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கவும் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com