Sunday, August 28, 2011

ஐ.ம.சு. முன்னணியின் நீர்கொழும்பு தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயம் திறப்பு

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலையிட்டு நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நீர்கொழும்பு தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயம் நேற்று சனிக்கிழமை (27) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் பெற்றோலிய வள அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்தவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான சரத்குமார குணரட்ன,அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, அனுரபிரியதர்சன யாப்பா, பிரதி அமைச்சர் லசந்த அழகிய வண்ண, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே. நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரேரா , நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படம்-1 பிரதி அமைச்சருமான சரத்குமார குணரட்ன நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரேரா உட்பட அதிதிகள்ழைத் வரப்படும் காட்சி
படம்-2 அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த திறந்து காரியாலயத்தை திறந்து வைக்கும் காட்சி
படம்-3 அதிதிகள் குத்து விளக்கேற்றும் காட்சி.







எம்.,இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com