Saturday, August 20, 2011

தொலைக்காட்சி பார்த்துக்கொன்டிருந்த சிறுமியை கடித்து குதறிக் கொன்ற நாய்

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து வந்த நாயொன்று கடித்து குதறிக் கொண்ற சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் மெல்போண் நகரில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சூடானிய அகதிக் குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர். இந்நாயானது இச்சிறுமியின் மைத்துனியான 5 வயது சிறுமியொருவரையும் 30 வயது பெண் ஒருவரையும் கடித்து காயப்படுத்தியுள்ளது.நாயிடமிருந்து 5 வயது சிறுமியை காப்பாற்ற சிறுமியின் தாயாரர் முயன்றவேனை நாயின் கவனம் சிறுமியின் பக்கம் திரும்பியுள்ளது. அச்சத்தில் தாயாரின் காலைப்பற்றி தொங்கிய சிறுமியை நாய் பலவந்தமாக இழுத்து கடித்து குதறியுள்ளது

இவர்கள் தென் சூடானிலிருந்து சுபீட்சமான வாழ்க்கையை தேடி அவுஸ்திரேலியாவில் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com