Saturday, August 13, 2011

சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் நடிகை கீதா குமாரசிங்கவுக்கு அச்சுறுத்தல்

இலங்கையின் பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பென்தர ஹெல்பிட்டிய தொகுதியின் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளருமான நடிகை கீதா குமாரசிங்கவை கத்தியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக இரு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று புதன் கிழமை ஹெல்பிட்டிய நாகதென்ன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. நடிகை கீதா குமாரசிங்க ஹெல்பிட்டிய பிரதேசத்தில் மரணச் சடங்கு இடம் பெற்ற வீடொன்றுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது அங்கு குடி போதையில் வந்த சந்தேக நபர்கள் இருவரும் அவருடன் வாக்கு வாதப்பட்டுள்ளனர். இதன் போதே சந்தேக நபர்கள் கத்தியை காட்டி நடிகையை அச்சுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com