Wednesday, August 10, 2011

அனோமா பொன்சேகாவின் வேண்டுதலுக்கு ரணிலிடமிருந்து பதிலில்லை.

கொழும்பு நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவை நிறுத்துமாறு பொன்சேகாவின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ரணிலிடமிருந்து பதிலேதும்வரவில்லையென அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

கடந்த 7ம் திகதி இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, நேரடியாக மறுப்பு தெரிவிக்காத ரணில் விக்கிரமசிங்க, மேல்மாகாண சபை உறுப்பினர்களான முசம்மில் , ராம் ஆகியோருடன் மத்திய கொழும்பின் தேசிய அமைப்பாளர் மஹ்றுப் ஆகியோர் மேற்படி ஆசனத்திற்கு கண்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாதகமான பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் அனோமா பொன்சேகா ஐ.தே. கட்சியுடன் இணைந்து கொள்ளமுடிவுசெய்துள்ளதாக அறியவருகின்றது. மறுபுறத்தில் அவரை தமது கட்சியின் மேயர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஜேவிபியினர் முயற்சி செய்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com