Thursday, August 4, 2011

ஒசாமாவை கொன்றது எப்படி? அமெரிக்கா புது தகவல்

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்ற புது தகவலை அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத்தில், கடந்த மே 2ம் தேதி அமெரிக்க படைகளால் அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்க ராணுவத்தினர் 6 அதிநவீன ஹெலிகாப்டர்களில் சென்று ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர். ‘ஒசாமா பதுங்கி இருப்பது உறுதியானவுடன் தாக்குதலுக்கு தயாரானோம். யாரையும் கைது செய்யும் நோக்கமோ, உயிருடன் பிடிக்கும் நோக்கமோ எங்களுக்கு இல்லை. யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளும் வேகத்தில் சென்றோம். வீட்டு படுக்கை அறையில் சல்வார் கமீஸ் அணிந்து ஆயுதங்கள் இன்றி ஒசாமா இருந்தார். அவருடைய மார்பில் முதலில் சுட்டோம். அதன்பிறகு தலையில் சுட்டோம். அப்போது ஒசாமாவை காப்பாற்ற அவரது 2 மனைவிகளும் ஓடிவந்தனர்’ என்று தாக்குதலில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒசாமாவை சுட்டுக் கொல்ல 5.56 எம்.எம் புல்லட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com