Friday, August 12, 2011

பொத்துவில் நகரில் இன்று அமைதியின்மை

பொத்துவில் நகரில் இன்று பகல் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.பொலிஸாரின் பொறுப்பில் இருந்த நால்வரை விடுவிக்குமாறு பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று தாக்கப்பட்டதுடன் பொலிஸ் ஜீப் ஒன்றிற்கும் சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரால் இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான நால்வரும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சற்று முன்னர் அவர்களை விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொத்துவில் ஊரணிப் பகுதியில் பெண் ஒருவரை சந்தேகத்துக்கிடமான இருவர் நேற்றிரவு துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com