Friday, August 12, 2011

இ.போ. சபையின் நடத்துனர்களால் மேற் கொள்ளப்பட்ட 2712 மோசடி செயல்கள்

இந்த வருட முதல் ஆறு மாத காலப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு (ஸ்ரீலங்கம) சொந்தமான பஸ்களில் டிக்கற் இன்றி பயணம் செய்தமை மற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டவர்கள் 2449பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஏழு இலட்சத்து 85 ஆயிரத்து 290 ரூபா பணம் இலங்கை போக்குவரத்து சபையினால் பெறப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் செய்யப்படும் மோசடிகளை ஒழிப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோனையின் பேரில் போக்குவரத்து சபையின் தலைமையக விசாரணைப் பிரிவினர் திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதன்படி 429 விசாரணைக் குழுக்கள் மேற்கொண்ட 4351 சோதனை நடவடிக்கையின் போது 56294 பஸ்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.இதன்போது டிக்கற் இன்றி பயணம் செய்த பயணிகளுக்கு மேலதிகமாக நடத்துனர்களால் மேற் கொள்ளப்பட்ட 2712 மோசடி செயல்கள் தொடர்பாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மோசடி செயல்களில் ஈடுபட்ட நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com