Sunday, August 14, 2011

பொத்துவிலில் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்பகளும் பிணையில்

பொத்துவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அமைதியின்மையின் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்பகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மாலை சந்தேகநபர்கள்பொத்தவில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரகளை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவைர்களில் சிலர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தவர்கள் எனவும் பொத்துவில் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தினால் அமைதியின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

.......

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com