Tuesday, August 16, 2011

13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. குணதாச அமரசேகர.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அதற்கான காரணத்தை கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விளக்குவார் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதத்திற்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அரசியல் தீர்வு என்ற போர்வையில் நாட்டிற்குள் சுயாட்சியை முன்னெடுக்க பயங்கரவாதத்தின் நிழல் மனிதர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com