Friday, July 1, 2011

பாகிஸ்தான் ஏவுகணை தளத்திலிருந்து வெளியேற யு.எஸ். மறுப்பு

சிஐஏ-வின் ரகசிய ஏவுகணைத் தாக்குதலுக்கு மையமாக பயன்பட்டு வந்த பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பாலைவன விமான தளத்தில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில், அதனை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

அல் காய்தா தலைவர் பின்லேடனை, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படையினர் சுட்டுக்கொன்றதிலிருந்து, பாகிஸ்தானுக்குள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இஸ்லாமாபாத்துக்கு தென்மேற்கே 900 கிலோமீட்டர்கள் தொலைவில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள பாலைவன விமான தளம்,சிஐஏ-வின் ரகசிய ஏவுகணைத் தாக்குதலுக்கு மையமாக பயன்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த விமான தளத்தில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்காவை பாகிஸ்தான் நிர்ப்பந்தித்தது.

அங்கிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அமெரிக்க இராணுவம் தங்குவதை பாகிஸ்தான் மக்கள் விரும்பவில்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமது கூறியிருந்தார்.

ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.அப்பகுதியில் தொடர்ந்து செயல்படுவோம் என அமெரிக்கா இன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com