Thursday, July 14, 2011

கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! ரஞ்சிதா

கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர்.

அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.

இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா.

அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்குக் காரணம் தியானம்தான். கடந்த சில வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். அது எனக்கு வலிமையையும், அழகையும் கொடுத்து உள்ளது. இப்போதைய எனது நடவடிக்கைகள் அவற்றின் பிரதிபலிப்புதான்.

தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதுதான் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் விஷயத்தில் நடந்துள்ளது. நான் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது கருணாநிதி எனக்கு பாதுகாப்பாக இல்லை. அப்போது அமைதியாக இருந்தார். ஆனால் கனிமொழிக்கு ஒன்று என்றதும் பதறுகிறார். கனிமொழிக்கு காட்டும் சென்டிமென்டை எனக்கு காட்டாதது ஏன்?

என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. ஒரு பெண்ணான எனனால் அரசியலில் சிறப்பாக பணியாற்ற முடியாது என்று கருதுகிறேன்.

என்னைப்பற்றி நிறைய அவதூறுகள் வந்தன. பழி வாங்கினார்கள். என் பெற்றோரும், சகோதரியும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனது மொத்த குடும்பமும் என் பக்கம் இருந்தது.

இனி மீண்டும் நடிக்க மாட்டேன்:

தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன். ஆசிரம பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். 100 சதவீதம் சமூக சேவைப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஆசிரமம் சார்பில் இலவச கல்வி அளித்தல், உணவு வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை தினமும் நடக்கின்றன. அதில் இணைந்து செயல்படுவேன். ஒரு மருத்துவமனை கட்டவும் விருப்பம் இருக்கிறது.

சினிமாத் துறையில், நடிகர்-நடிகைகள் யாருடனும் நான் தொடர்பில் இருக்கவில்லை. அவர்கள் ஆதரவு எனக்கு தேவையும் இல்லை. நானும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அடுத்த சில ஆண்டுகளில் சன்னியாசியாக மாறப் போகிறேன்," என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை வாழ்த்தி வணங்குகிறேன்-வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா

ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ:
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.

தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்:
என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நானும் ஒரு பத்திரிக்கையாளன்:
நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்:
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.

இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா.

4 comments :

Anonymous ,  July 16, 2011 at 8:05 AM  

இவ் நவீன உலகில் இன்றும் தமிழ் மக்களில் பலர் செம்மறி ஆடுகள் போல் ஏமாளிகளாகவும்,வெருளிகலாகவும் வாழ்ந்து வருவதினால்,

அவர்களை பாவித்து தன்னலம் அடைய பல ஓநாய்களும், நரிகளும் தமிழும், தெய்வீகமும் என்று எம்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் வரிந்து கட்டி நிற்கின்றார்கள்.

தமிழினம், இவ்வுலகில் முன்னேருவதாகில் தமிழ், மதம், இனம் என்று புலம்பும் எவரையும் நம்பக்கூடாது.

Anonymous ,  July 17, 2011 at 1:23 AM  

Ask who are in the vedio clips?

Anonymous ,  July 17, 2011 at 9:39 PM  

It is not the matter who are in the vedio clips, That is their freedom. Definately, it is not problem or important for others.
Why should people watch them and follow them? Are those people domastic animals of them?

Anonymous ,  July 20, 2011 at 9:23 AM  

தமிழினம், இவ்வுலகில் முன்னேருவதாகில் தமிழ், மதம், இனம் என்று புலம்பும் எவரையும் நம்பக்கூடாது.

மிக சரியான கருத்து.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com