Monday, July 4, 2011

கிழக்கில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன -சரத் பொன்சேகா

பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் கழிய முன்னர் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துவரப்பட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளின் ஆரம்ப நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைகள், வன்முறைகளைச் சுட்டிக்காட்ட முடியும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெள்ளைக்கொடி விவகார வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக வழக்கு விசாரணைகளை நாளைய தினம் வரை ஒத்திவைக்க மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்தது.மின்சாரத் தடை காரணமாக வெள்ளைக்கொடி விவகார வழக்கில் தடை ஏற்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்படதக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com