Monday, July 4, 2011

புலிகளின் 500 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள் 8 வங்கிகளில்.

புலிகளுக்கு சொந்தமான 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகின் மிகவும் பிரபலமான 8 வங்கிகளில் 5 நாடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் நெதர்லாந்தில் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இத்தகவல் சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ளது. அச்செய்தியில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களாக 21 பேர் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்பணத்தில் பெரும்பகுதி சுவிற்சர்லாந்து வங்கிகளில் உள்ளதாக கூறப்படுகின்றது.

மேற்படி 8 வங்கிகளில் 4 வங்கிகள் கனடாவில் உள்ளவை எனவும் அவை அந்நாட்டு பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com