Saturday, July 9, 2011

இலங்கை மீனவர்களும் அவர்களுடைய மீன்பிடி படகுகளும் விடுதலை

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற குற்றச் சாட்டின் பேரில் அந்த நாட்டு கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இலங்கை மீனவர்களும்அவர்களுடைய இரண்டு மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்தார்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாகப்பட்டினம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் திணைக்களம் மீன்பிடி படகுகளை மீட்பதற்கு இந்திய நாணய மதிப்பில் ஐந்து இலட்ச ரூபா செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது
விடுதலையாகியுள்ள மீனவர்கள் சிலாபம் மற்றும் தேவேந்திர முனை பிரதேசங்களிலிருந்து கடலுக்குச் சென்றவர்களாவர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com