Saturday, June 11, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்

அண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கவியரங்கில் மிகவும் மிகச் சிறப்பாக கவிபாடி இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த கவிஞர்களான பொத்துவில் அஸ்மின் என்.நஜ்முல்ஹூசைன் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு 8,எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி, மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு பொன்னாடை போர்த்த பிரதியமைச்சர் பஷீர்சேகுதாவூத் நினைவுசின்னம் வழங்கி கௌரவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com