Sunday, May 22, 2011

அவரகாலச் சட்டத்தினை உடனடியாக நீக்கவேண்டும். அனுரகுமார

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் யுத்தகாலத்தில் அவசரகாலச் சட்டமானது மேலும் குரோதத் தன்மையை வளர்த்ததாகவும், தற்போதும் அவசரகாலச் சட்டத்தினை தொடர்வதன் மூலம் மக்களிடத்து நம்பிக்யையின்மை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, ஏனைய நாடுகளும் நம் நாட்டு விவகாரத்தின் மீது தலையிடுவதனை தவிர்கமுடியாது போகும் எனவும் எச்சரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com