Wednesday, April 20, 2011

இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ஏப்பரல்,18 அரேபிய கடலில் இந்திய - பாக் எல்லையில் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலம் ஹச் மாவட்டத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 5 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ஒரு படகையும் மீனவர்கள் 14 பேரையும் விடுவித்தனர். மற்ற 4 படகுகளையும் 12 மீனவர்களையும் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இம்மாத துவக்கத்தில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக 21 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் மீனவர்களுக்கு சொந்தமான 6 படகுகளையும் பறிமுதல் செய்தது. கடந்த சில மாதங்களில் 63 இந்திய மீனவர்கள் பாக். கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 படகுகள் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 223 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டும் 56 மீன்பிடி படகுகள் பாக். கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com