Tuesday, March 8, 2011

தமிழ்செல்வனின் பிரத்தியேக உதவியாளரின் மனைவியை கரம் பிடிக்க துடிக்கும் சீமான்.

புலிகளியக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்டுவந்த அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம்பிடிப்பதற்கு இந்திய சினிமா இயக்குனர் சீமான் முயன்றுவருவதாக தெரியவருகின்றது.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோது தமிழ் செல்வன் கலந்து கொண்ட சகல வெளிநாட்டு பேச்சுக்களிலும் அலக்ஸ் கலந்து கொண்டவர். புலம்பெயர் தேசங்களில் புலிகளின் முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல விடயங்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பான சகல விடயங்களையும் அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது. அத்துடன் பெரும்பாலான முதலீடுகள் தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப அங்கத்தவர்கள் பலரின் பெயரில் முதலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என நம்பும் சீமான் அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலக்ஸ் குழுவினரின் முதலீடுகளை கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக தெரியவருகின்றது.

புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் சாமாதான ஒப்பதம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியா சென்றிருந்த அலக்ஸின் மனைவியார் சீமானின் மேற்பார்வையில் அங்கு தங்கியிருந்ததுடன் அக்கால கட்டத்தில் அவர்கள் இருவருக்குமிடையே உருவான நட்பினை பயன்படுத்தி சீமான் தற்போது அவரை தனது சித்துவிளையாட்டை ஆரம்பித்துள்ளதாக நம்பமுடிகின்றது.

அலக்ஸின் துணைவியார் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரை அங்கிருந்து மீட்பதற்காக சீமான் பல லட்சம் ரூபாய்களை செலவிட்டதாகவும் அறியமுடிகின்றது.

4 comments :

Anonymous ,  March 9, 2011 at 6:35 AM  

அடி சபாஸ்!
கதை அப்படியா போகுது? சோழியன் குடும்பி சும்மா ஆடுமா?

Anonymous ,  March 9, 2011 at 9:20 PM  

தமிழ்நாட்டு கோமாளி அரசியல்வாதிகளை நம்பி பிரபாகரன் உயிரோட தலையிலே கொத்து வேண்டினது தான் மிச்சம் , இப்ப தமிழ்நாட்டு கூத்தாடிகளை நம்பி வெளிநாட்டு புலிகள் சொல்ல முடியாத இடத்தில் அளவான்காலே வேண்டப்போறான்கள்.

Anonymous ,  May 3, 2011 at 10:46 AM  

Tamilargal Tamil naadu nadigarkalai nambaamal Ilangai Tamil Arasial vathikaludan pesuvathan moolame namadu urimaikalai pera mudiyum.

Anonymous ,  June 11, 2011 at 9:17 PM  

மேலே comment போட்ட நண்பர்களே மடியர்களே கொஞ்சம் கூட சொரனையே இல்லையாடா ஏன் உங்கலுக்கு ஏழுமெண்டால் இறுதி யுத்தத்தில் பாதிக்கப் பட்டபெண் ஒருத்திக்கு வழ்வு குடுங்கடா பாப்பம் மடையர்களே எங்கடா இருந்தீங்க கடைசி நேரத்தில எங்கட பெண்களை கற்பழிக்கும் போது அம்மாட சேலைகுள்ளயாட பதுங்கினீங்க இப்ப வந்து கதைக்க உங்கலுக்கு தகுதியே இல்லடா நாக்க அறுத்தெரிங்கடா..பு...

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com