Friday, March 4, 2011

பிராங்போர்ட் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு, இரு அமெரிக்க வீரர்கள் பலி.

ஜேர்மனியின் பிராங்போர்ட் விமானநிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது இரு அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவவீரர்கள் பயணித்துக்கொண்டிருந்த பஸ்வண்டி மீது ஆயுதம் தரித்த நபரொருவர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போதே விமானப்படையினர் இருவரும் பலியாகினர்.

விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலை அண்மித்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் கொசோவாவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த படைவீரர்கள் பிரிட்டனிலிருந்து விமானம் மூலமாக வந்திறங்கியதாகவும் அங்கிருந்து ரம்ஸ்டீனிலுள்ள இராணுவமுகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீரர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பஸ் சாரதி மற்றும் பயணம் செய்த வீரர் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com