Friday, March 4, 2011

அமைச்சர்களுக்குக்கூட விஸா இல்லை - லக்‌ஷ்மன் கிரியெல்ல

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என அரசாங்கம் கூறுவது யாராலும் ஏற்கொள்ள முடியாத ஒரு பொய் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.​ கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளரின் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதும் அதேபோன்றதொரு பொய்யெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து தப்பி வந்து சரணடைந்த சுமார் 3 லட்சம் பேர் வரையிலானோர் குறித்து அரசிடம் எதுவித தெளிவான கருத்துகளும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய காலகட்டத்தில் அமைச்சர்களுக்கு கூட மேற்குலக நாடுகள் செல்ல விஸா பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com