Wednesday, March 9, 2011

23 வயதில் பாட்டியான பெண்

உலகிலேயே மிக இளம் வயதில் ருமேனியாவை சேர்ந்த 23 வயது பெண் பாட்டி ஆகி இருக்கிறார். அந்த பெண்ணின் பெயர் ரிப்கா ஸ்டெனாஸ்க். இவரது முதல் குழந்தை மரியா பிறந்த போது இவருக்கு வயது 12. இந்த குழந்தை வளர்ந்து பெரியவளான போது நீ என்னை பின்பற்றாதே. நன்றாக படித்து பட்டம் பெற்ற பிறகு திருமணம் செய்து கொள் என்று சொன்னாள். ஆனால் மரியா தன் தாயாரை அப்படியே பின்பற்றினாள். அவள் 11 வயதில் ஒரு குழந்தைக்கு தாய் ஆனாள். அது ஆண் குழந்தை. அதன் பெயர் அயோன்.

ரிப்கா நகை வியாபாரி அயோனல் ஸ்டெனாஸ்க்கை தன் 11 வயதில் திருமணம் செய்து கொண்டாள். அப்போது அயோனலுக்கு வயது 13. தன் தந்தை தனக்கு கிராமத்தில் வேறு ஒரு மாப்பிள்ளையை நிச்சயித்து இருப்பது தெரியவந்ததும், ரிப்கா தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த ஆண்டே ரிப்காவுக்கு மரியா பிறந்தாள். அதற்கு அடுத்த ஆண்டு நிகோல் என்ற பெயரில் மகன் பிறந்தான். மரியா 10 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போனாள். இது நடந்த 6 மாதத்தில் அவளுக்கு குழந்தை பிறந்தது. அயோன் பிறந்ததால் ரிப்கா 23 வயதில் பாட்டி ஆனார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com