ஐ.ம.சு.மு யின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் நாமல் கையில். கட்சியினுள் அதிருப்தி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியயோர் கடந்த தேர்தல்களின் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர் தெரிவு என்பவற்றில் ஈடுபட்டு வந்த நிலை யில் வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் செயற்பாடுகள் மகிந்தவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுவதால் ஆளும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் ஆளுங்கட்சியின் பிரசார பணிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும், இம்முறை அவை நாமலின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்பாடுகளினால் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தியுடன் செயற்படுவதுடன், ஒரு சிலர் தத்தம் பிரதேசங்களில் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கும் வகையில் அப்பிரதேசத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபி சார்பு ப த்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment