Friday, November 12, 2010

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சிக்கான ஒப்பந்தம்.

நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இலங்கை சட்டத்துறை அமைச்சர் சென்விரத்னேவும், இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே காந்தாவும் நேற்று கொழும்பில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிபதிகளுக்கு இந்தியாவில் சட்ட நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்பின் இலங்கை நீதிபதிகள் பெங்களூரு மற்றும் போபால் நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பெறுவர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com