Monday, September 20, 2010

உப்புவெலியில் மண்டையோடு மீட்பு

திருகோணமலை - உப்புவெலி - அம்பிலிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உப்புவெலி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த மனித மண்டையோட்டுத் துண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித மண்டையோட்டுத் துண்டுகள் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித மண்டையோட்டுத் துண்டுகள் அநுராதபுரத்திற்கு பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை உப்புவெலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com