Monday, September 20, 2010

ஆட்கடத்தலுக்கு உதவிய இளைஞனுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு ஆஸி நீதிமன்றம் 5 வருடத்திற்கு மேற்ப்பட்ட சிறைத் தண்டனை வழங்க உள்ளது.

சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன்(வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை இன்று சிட்னிஸ் டவ்னிங் நிலைய மாவட்ட நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

இவர் நீதிபதி ரொபின் டொப் மென் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆஸி வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.

இவர் இலங்கை அகதிகளின் உறவினர்களிடம் இருந்து ஆஸியில் வைத்து 40000 அமெரிக்க டொலர் வரை இலஞ்சமாகப் பெற்றிருந்தமையை முதல் தடவையாக நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com