Sunday, September 5, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழினத் துரோகி. வை.கோ.

புலிகள் தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்துவருகின்றனர் என்றபோது, இல்லை புலிகள் தமிழ் மக்களுக்காவே போராடுகின்றனர் என மக்களை மடையர்களாக்குவதில் முன்னணியின் நின்றுவந்த வை.கோபாலசாமி புலிகளியக்க தலைவர் ஓர் தமிழினத் துரோகி என அறிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் ஒப்புதலுடன் கே.பி அவ்வியக்கத்தின் தவைர் என தன்னை அறிமுகம் செய்திருந்தமை யாவரும் அறிந்தது.

இந்நிலையில் கே.பி தமிழ் மக்களின் துரோகி என புலிகளின் முன்னணி ஆதரவாளர்களில் ஒருவரான வைகோ அறிவித்துள்ளார். பிரபாகரன் முதல் அவ்வியக்கத்தின் தலைவர்கள் யாவருமே தமிழினத் துரோகிகள்தான் என்பது பலவடிங்களில் வலியுறுத்தப்பட்டபோதும் அதை ஏற்க மறுத்த மக்கள் தற்போது புலிகளின் முன்னணித் தலைவர்களின் சுயரூபத்தை சற்று அனுபவித்து வருகின்ற நிலையில் கே.பி தமிழினத் துரோகி என வை.கோ கூறியுள்ளார்.

''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

இது புலிகளின் இயற்கை குணமாகும் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காக காலங்கள் வரும்போது புலிகள் கடந்தகாலங்களில் செய்த அராஜகங்களை வெளியிடுவர். வெளியிடுவோர் அவ்வராஜகங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பர், அத்துடன் தற்போதே தாம் இவ்விடயங்கைளை உணர்ந்து கொண்டுள்ளளோம், இதுவரை காலமும் எமது வாய்களில் சூப்பி இருந்தது , அச்சூப்பி தற்போது தவறி விழுந்துவிட்டபோதே எமக்கு அறிவு வந்ததென்பர், இதுவெல்லாம் நாம் வரலாற்றில் படித்த பாடங்கள்.

இந்த நிலையில்,கேபியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு வைகோ அளித்துள்ள பேட்டியில் :

தமிழீழம் என்பது அழிந்துபோன இலட்சியம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாரே கே.பி எனக் கேட்க்கப்பட்டபோது, இதைச் சொல்ல, துரோகி கே.பி-க்கு அதிகாரம் கொடுத்தது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள வைகோ , இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதில் இன்றைய அத்தியாயம் கே.பி. ராஜபக்சே அரசின் கைக் கூலியாகத் தமிழினத்துக்கு துரோகம் செய்வதையே இன்றைய தொழிலாகக்கொண்டு மாறிவிட்ட கே.பி-யிடம் இந்த வார்த்தைகளைத்தானே எதிர்பார்க்க முடியும்?

தமிழீழம் வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வநாயகத்தின் மறுவடிவமா இவர்? எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

2002-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நானே தலைவர்' என்றும், 'பிரபாகரன் தன்னை அப்பொறுப்பு வகிக்கச் சொன்னார்' என்றும் முழுப் பொய்யைச் சொல்லி தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர்தான் இந்த கே.பி.! அப்படிப்பட்டவர் பேசும் பேச்சா இது? எனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள், சாதாரண மக்கள் மீது வன்முறையைத் தூண்டி துன்பம் விளைவித்ததாக கே.பி. சொல்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித் வைகோ, இது மட்டுமா சொல்கிறார் அவர்? கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர் வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்சேவின் சகோதரன் கோத்தபாய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கேக்கும் தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக அன்போடு தன்னிடம் பேசியதாகவும், அதன் பின் தான் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கே.பி. கூறியிருக்கிறார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் கூறியிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்துவிட்டதாக கோத்தபாயாவிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். சிங்கள அரசால் சிங்காரித்து பூஜிக்கப்படும் கே.பி., 2009 மே 17-க்கு முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டதாகக் கூறிய கே.பி., விடுதலைப் புலிகளைப் பற்றியும், உயிர் கொடுத்துப் போராடிய போராளிகள் பற்றியும், அதன் தலைவர் பற்றியும் உயர்வாகப் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக கே.பி. சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என்பதை வேறு வார்த்தையில் கேட்டிருக்கிறார் கே.பி. ராஜபக்சேயின் ராஜ்யத்தில் தனது மிச்ச நாட்களைக் கழிக்க வேண்டிய நேரத்தில் கே.பி-யால் இப்படித்தான் பேச முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com