Tuesday, September 21, 2010

புதையல் கொள்ளையடித்த ஏஎஸ்பி உட்பட 7 பொலிஸார் கைது.

பொலன்னறுவை ஸ்ரீபுர சூரியதேவ விகாரையில் புரதான புதையல்களை கொள்ளையிட்ட வாகரைப் பிரதேச பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 8 பொலிஸ் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இக்கொள்ளையில் ஈடுபட்டதனை நேரில் பார்த்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் கொள்ளையர்கள் புதையல் பொருட்களுடன் தப்பிச் செல்லும்போது மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் மேலும் இரு சிவிலியன்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் இன்று பொலன்னறுவை மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com