Friday, August 27, 2010

மகளை கற்பழித்த தந்தை கைது. மட்டுநகர் வாகன விபத்தில் மாணவி பலி

வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆனந்தகுமாரசுவாமி இடைத்தங்கல் முகாமில் தனது மகளை கற்பழித்ததாக குற்றஞ்சுமத்தப்படும் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் 45 வயதுடையவர் எனவும் , மகள் 17 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

அதேநேரம் பொலநறுவை அறகங்வில பிரதேசத்தில் 12 சிறுமி ஒருவரை கற்பழித்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நெல் வயல் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மட்டக்களப்பு நகர பாலமருகே இடம்பெற்ற விபத்தொன்றில் 11 வயதுமாணவி ஒருவர் ஸ்தலதிலேயே உயிரிழந்துள்ளார். மட் - வின்சன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த சற்குணம் கோகிலா என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு செல்லும் வழியில் பாதையை கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com