Monday, June 21, 2010

ஈரான்: சன்னி முஸ்லிம் தலைவருக்கு தூக்குத் தண்டனை

ஈரானின் தென்கிழக்கு மாநிலமான சிஸ்டென் பலுஜிஸ்தானத்தில் ரத்தக்களறி கலவரத்தை நடத்தியவர் ஜுந்தல்லா என்ற சன்னி முஸ்லிம் கலகக் குழுவின் தலைவர் அப்துல் மாலிக் ரிகி. அவரை ஈரானிய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது என்று இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான் புரட்சி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அப்துல் மாலிக் ரிகி, ஈவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

அப்துல் மாலிக் ரிகியின் கும்பல் ஆயுதக் கொள்ளை, படுகொலை முயற்சிகள், ராணுவத்தைத் திட்டமிட்டுத் தாக்கியது, போலிஸ் மீது தாக்குதல் நடத்தியது, சாதாரண மக்களைக் கொன்றுகுவித்தது ஆகிய வன்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்தது. அப்துல் மாலிக் ரிகி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து கிர்கிஸ்தானுக்குத் தப்பி ஔட முயன்றார். வழியில் அவரை ஈரான் கைது செய்தது. - ஏஎப்பி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com